search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரண்டை இலைத் துவையல்"

    பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூலநோய் போன்றவை குணமாகும்.
    தேவையான பொருட்கள் :

    பிரண்டை இலை - 100 கிராம்,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 3 பல்,
    மிளகு - 5,
    காய்ந்த மிளகாய் - 3,
    கறிவேப்பிலை - தேவையான அளவு,
    கொத்தமல்லி - தேவையான அளவு
    மஞ்சள், உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை  :

    பிரண்டை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டை இலை, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.

    மிக்சியில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து அதனுடன் வதக்கியவற்றையும், உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    சூப்பரான சத்தான பிரண்டை இலைத் துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×